55 வயது டீச்சருடன், 11வது மாணவன் உல்லாசம்.! மீளாத மோகம், தீராத சோகம்..!  - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அக்பர் அலி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் கொடுத்த மனுவில், "தனியார் பள்ளியில் என்னுடைய மகன் பதினொன்றாம் வகுப்பு படிக்கின்றான்.

அப்பள்ளியில் முதல்வராக பணியாற்றிய ரேவதி என்ற 55 வயது பெண்மணியிடம் டியூஷன் படிக்க எனது மகனை அனுப்பினேன். இந்நிலையில், இருவருக்கும் தவறான உறவு இருப்பதாக புகார்கள் எழுந்தது. என்னுடைய மகனின் நடத்தையிலும் மாற்றம் தெரிந்தது.

எனவே பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளிக்க உடனடியாக ரேவதி வேற பள்ளிக்கு சென்று விட்டார். ஆனால், சமூக வலைதளம் மூலமாக ரேவதி என்னுடைய மகனுடன் இன்னமும் தொடர்பில் தான் இருக்கின்றார். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என் மகனை அந்த ஆசிரியையிடம் இருந்து மீட்டு தாருங்கள். இந்த உறவின் காரணமாக என் மகனின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கின்றது." என்று மனு கொடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி வரும் 26-ஆம் தேதி தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher loves student pudukottai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->