திருமணத்திற்கு முன்பே அவசரப்பட்டு பெண் செய்த காரியம்.! பெற்றோருக்கு அதிர்ச்சி.!
running marriage in madhavaram
சென்னை மாதவரத்தில் மகேஷ் என்பவருக்கு மோனிகா என்ற 20 வயது மகள் இருந்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த தங்களுடைய உறவினரின் மகனை திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தினரும் சேர்ந்து முடிவு செய்தனர்.
அதன்படி திருமணம் இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் தன்னுடைய தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறிய மோனிகா வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். இரவு ஒன்பது மணி ஆகியும் மோனிகா வீட்டிற்கு திரும்பவில்லை. அவரது தொலைபேசியும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதன் காரணமாக பெற்றோர்கள் பதறி போய் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், விசாரணையில் தான் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டைவிட்டு வெளியேறிய மோனிகா இதற்கு முன்னதாக தான் காதலித்து வந்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டு இருக்கின்றார்.
அருகில் இருந்த காவல் நிலையத்தில் மோனிகா தஞ்சம் அடைந்தார். மோனிகா மற்றும் கார்த்திக் இருவரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
English Summary
running marriage in madhavaram