நம்பி வந்த நண்பனை சீரழித்த கயவன்.!! டெல்லி வாலிபரின் கேவலமான செயல்.!!  - Seithipunal
Seithipunal


டெல்லியில் தல்பீர் என்பவரின் மனைவிக்கும், குல்கேஷ் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.  குல்கேஷ் மற்றும் தல்பீர் இருவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தல்பீர் இடமிருந்து அந்த பெண்ணை பிரித்து திருமணம் செய்து கொள்ள குல்கேஷ் முடிவு செய்தார். 

ஆனால், அந்த பெண் திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக தல்பீரை கொலை செய்து விட்டால் அவரது மனைவியை நாம் திருமணம் செய்து கொள்ளலாம் எனத் திட்டம் தீட்டிய  குல்கேஷ், அதன்படி தல்பீரை தனியாக அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கி ரயில் தண்டவாளத்தில் தூக்கிப் போட்டுள்ளார்.

இதன் காரணமாக ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்து தல்பீர் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் போலிசாருக்கு  குல்கேஷ் தகவல் அளித்துள்ளார். ஆனால் தகவல் கொடுத்த,  குல்கேஷ் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வந்தனர். இந்த கொலையில் தல்பீர் மனைவியோ அல்லது வேறு யாராவது தொடர்பில் இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder in delhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->