வயிறு வலி மருத்துவத்தில் சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம்.! பெற்றோர் அதிர்ச்சி.!
delivery for school girl in truppur
வயிறு வலி என மருத்துவமனை சென்ற 17 வயது மாணவி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் அரசு மருத்துவமனையில் சிறுமி ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது என கூறி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் இது வெறும் வயிற்று வலி அல்ல பிரசவ வலி என கூற உடனிருந்த பெற்றோருக்கு தூக்கி வாரி போட்டுள்ளது.
அதன் பின்னர் சிகிச்சை முடிவில், பெண் குழந்தை ஒன்றை அவர் பெற்றெடுத்துள்ளார். பின்னர் இதுகுறித்து காவல் துரையினரிடம் புகார் அளிக்கப்படவே, விசாரணையில் வெளியான விஷயம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி 11ம் வகுப்பு படிக்கும் பொழுது, சக மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பழக்கம் என்பதை மீறி காதல் என கூறிக்கொண்டு ஒரு ஈர்ப்பில் இருந்துள்ளனர். பின்னர் அந்த மாணவன் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திவிட்டு காட்டன் மில் ஒன்றுக்கு வேலைக்கு சென்றுள்ளான்.
பின்னர் அந்த பெண்ணுடன் பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளனர். இதன் காரணமாக அவள் கர்ப்பமும் அடைந்து இருக்கிறாள். பின்னர் திடீரென வயிற்றுவலி என கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவே, குழந்தை பிறந்துள்ளது.
பின்னர் அந்த சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், குழந்தையை பெண் குழந்தை காப்பகத்தில், அந்த சிறுமியை பெற்றோரிடமும் ஒப்படைத்துள்ளார். உரிய வயதிற்கு பின்னர் குழந்தை பெண்ணிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
delivery for school girl in truppur