கமல்ஹாசன் லாஸ் ஏஞ்சல்ஸிற்கு சொந்த காசில் போனார்! நீங்கள் எந்த காசுல போயிருக்கீங்க! - சினேகன்! - Seithipunal
Seithipunal


லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்காவில் இருக்கு என்றால், கலிபோர்னியா கரூருக்கு பக்கத்துல இருக்கா என்ன?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த போது அங்கு தனது நற்பணி மன்ற நிர்வாகிகளையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசி இருந்தார்.

இந்நிலையில் இன்டர்நேஷனல் லீடர் பெல்லோஷிப் என்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்காக அண்ணாமலை கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவிற்கு சென்றார். பயிற்சி முடிந்த பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அண்ணாமலை பங்கேற்று வருகிறார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கமல்ஹாசனையும் விமர்சித்திருந்தார். கமல்ஹாசன் அமெரிக்காவில் போய் அரசியல் பேசுவதாக அண்ணாமலை கூறியிருந்தார்.

மநீம நிர்வாகி முரளி அப்பாஸ், "ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து, ஆளைக் கடிப்பதுபோல் இப்போது நம்மவரை கடித்துக்குதற முனைந்திருக்கிறார். இப்படி அர்த்தமற்ற பேச்சை தொடர்ந்து பேசுவாரானால், அவர் அரசியலில் மதிப்பிழந்து, அவர் ஏற்கனவே சொன்னபடி, ஆடு மேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும். நேர்மையான அரசியலை கொண்டுவர முயலும் கமல்ஹாசனை குற்றம் சொல்லும் தகுதி தனக்கில்லை என்பதை உணர்ந்து இனியாவது முன்னாள் காவல் அதிகாரி என்ற கவுரவத்திற்கு பங்கம் வராமல் பேசவேண்டும்" என தனது அறிக்கையின் மூலம் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மையத்தின் மாநிலச் செயலாளரும் கவிஞருமான சினேகன் தனது twitter பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆகாயத்தைப் பார்த்து எச்சில் உமிழாதீர்கள் அண்ணாமலை சார் என தலைப்பிட்டு வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ பதிவில் கூறியதாவது "வணக்கம் அண்ணாமலை சார். எங்க தலைவர் அமெரிக்காவில் அரசியல் பேசுவதாக சொல்லியிருக்கிறீர்கள். அவர் லாஸ் ஏஞ்சல்ஸிற்கு சொந்த காசில் போனார். நீங்கள் எந்த காசுல போயிருக்கீங்கனு எங்களுக்கு தெரியாது. அவர் அமெரிக்காவில் இருந்து அரசியல் பேசுறார் என்றால் இப்போ நீங்க எங்க இருந்து பேசுறீங்க? லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்காவில் இருக்கு என்றால், கலிபோர்னியா கரூருக்கு பக்கத்துல இருக்கா என்ன? அப்படி இல்லை அல்லவா? அவர் அங்கு போனதற்கு காரணம் தன் துறை சார்ந்து மேல் படிப்புக்கு போனார். போன இடத்தில் எங்கள் நற்பணி மன்ற தோழர்களைப் பார்த்து அரசியலும் பேசி இருக்கிறார், நல்ல விஷயங்களையும் பேசி இருக்கிறார்.

ராஜராஜனை பற்றி இவ்வளவு காலம் கழித்து கமல் பேசுகிறார் என கிண்டலடித்து இருக்கிறீர்கள். அன்றைக்கு தான் அவர் பொன்னியின் செல்வன் படம் பார்த்தார். பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னார், உண்மை வரலாற்றை சொன்னார். இந்த வரலாறு இன்று நேற்றல்ல, ஆதி சங்கரர் சொன்னது. காஞ்சி பெரியவர் சொன்னது, எழுத்தாளர் சோ சொன்னது. எல்லாவற்றையும் இன்றைக்கு நினைவுபடுத்த வேண்டிய இடத்தில் எங்கள் தலைவர் இருக்கிறார்.

யார் வரலாறு பேசினாலும் அமைதியாக இருக்கிறீர்கள் நாங்கள் வரலாறு பேசினால் மட்டும் ஏன் இந்த ஆட்டம் ஆடுகிறீர்கள். அரசியலை விட்டுவிட்டு தொழிலுக்கு சென்றுவிட்டார் என்கிறீர்கள். நீங்களும் தான் ஒருமுறை சொல்லி இருக்கிறீர்கள், அரசியல் சரியில்லை என்றால் நான் ஆடு மாடு மேய்க்க போய்விடுவேன் என்று. அவர் அப்படி அல்ல.

அவர் அரசியலும் செய்கிறார், தொழிலையும் பார்க்கிறார். காரணம், அரசியல் கட்சி நடத்துவதற்கு பணம் தேவைப்படுகிறது. உங்களுக்கு கொட்டிக் கொடுப்பது போல மேலிருந்தும், கீழிருந்தும்.. கருப்பாகவும், வெள்ளையாகவும் கொட்டிக்கொடுக்க எங்களுக்கு யாரும் இல்லை. அப்படி கொடுத்தாலும் நாங்கள் வாங்குபவர்கள் இல்லை.

எனவே தான் தொழிலையும் பார்க்கிறோம், அரசியலும் செய்கிறோம். இனியாவது ஒருவரை விமர்சனம் செய்வதற்கு முன்பு, பண்போடு பகுத்து ஆய்ந்து பேசுங்கள். அதுதான் படித்தவர்களுக்கு நல்லது. ஆகாயத்தை பார்த்து எச்சில் துப்ப ஆசைப்படாதீர்கள். அது உங்கள் முகத்தில் தான் விழும்" எனப் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

video posted by Snehagan who responded to Annamalai went viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->