பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வி.சி.க பிரமுகர்! அதிர்ச்சியளிக்கும் மற்றுமொரு பொள்ளாச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


சேலம் மகுடஞ்சாவடியை பகுதியில் வசித்து வருபவர் மோகன்ராஜ். கா.கா. பாளையம் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராக உள்ளார். சொந்தமாக இரண்டு ஆட்டோக்களை வைத்துள்ள மோகன்ராஜ், அதில் ஒரு ஆட்டோவை நண்பனுக்கு வாடகைக்கு விட்டு ஒரு ஆட்டோவை மோகன்ராஜ் ஓட்டி வந்துள்ளான்.

இந்த நிலையில், மோகன்ராஜின் ஆட்டோவில் பயணித்த பெண் ஒருவர், மோகன்ராஜ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மீண்டும் படுக்கைக்கு அழைத்து மிரட்டி வருவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியின் அரசியல் செல்வாக்குடன் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆட்டோ மோகன்ராஜை அமுக்கி பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது அவன் இது போன்று பல்வேறு பெண்களை பாலியல் பலாத்தகாரம் செய்த திடுக்கிடும் தகவல் வெளியில் வந்தது.

 இதை அடுத்து காவல் நிலையத்தில் வைத்து அவனுடன் விசாரணை மேற்கொண்ட காவல்துறை அவனிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்து பார்த்தனர், அந்த  செல்போனில், அவன் 7 பெண்களை கொடுமை படுத்தி பலவந்தமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ காட்சிகள் பதிவாகி இருப்பதை கண்டு போலீசார் அதிர்ந்து போயினர். 

அந்த வீடியோக்களில் இருந்தவர்கள் 6 பேர் குடும்ப பெண்கள் என்பதும் ஒருவர் கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்ததுள்ளது. அவனது ஆட்டோவில் தனியாக வரும் பெண்களிடம் நல்லவன் போல பேசி நடித்து அந்த பெண்களின் குடும்ப நிலவரத்தை முழுவதும் அவர்களிடமே விசாரிப்பது. பண பிரச்சனையில் இருந்து வரும் பெண்கள் என தெரிந்தால் அவர்களுக்கு கடனாக பணம் கொடுத்து உதவுவது போல நடித்து அவனது வீட்டிற்கு அழைத்து செல்லும் மோகன்ராஜ், அங்கு அவர்களை கடுமையாக மிரட்டி அடித்து சித்திரவதை செய்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மீண்டும் தான் விரும்பிய நேரத்தில் அந்த பெண்களை தனது வீட்டுக்கு வரவழைத்து தனது காம இச்சையை தீர்த்துக் வந்துள்ளான்.

இதுபோல பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடி வரும் காமுகன் ஆட்டோ மோகன்ராஜின் அட்டூழியம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்காமல் இருந்ததற்கு காரணம், விடுதலை சிறுத்தை கட்சியில் அரசியல் செல்வாக்கும் அடாவடியான நடவடிக்கைகளுமே காரணம் என்றும் பெண்களை பலாத்காரம் செய்த வீடியோவை காட்டி பெண்களிடம் அவன் நடந்து கொள்ளும் விதம் மிகவும் கொடூரமாக இருக்கும் என அவனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலீசாரிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். 

இவனிடம் பலாத்காரம் செய்யப்பட்ட 7 பேர்களில் ஒரு பெண்ணை காணவில்லை, அந்த பெண் குடும்பத்துடன் சொந்த ஊரையே காலி செய்து சென்றுவிட்டதாக, போலீசாரிடம் மோகன்ராஜ் தெரிவித்துள்ளான். அந்த பெண்ணின் தற்போதைய நிலை போலீஸ் விசாரித்து வருகின்றனர். 

கொடூர குணம் கொண்ட காமுகன் ஆட்டோ மோகன்ராஜ்க்கு ஏற்கனவே  2 மனைவிகள் என்றும் அதில் முதலில் ஒரு பெண்ணை கதலித்து திருமணம் செய்து  கொண்டான். திருமணத்துக்கு பின் இவனது தொல்லை தாங்க முடியாமல் அந்த முதல் மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது. இதையயடுத்து நண்பனின் வீட்டுக்கு சென்று வந்த கொண்டிருந்த இவன், நண்பனின் மனைவியை திருமணம் செய்து கொண்டதாகவும் அந்த பெண்ணும் இவனது தொல்லை தாங்காமல் பிரிந்து விட்டு பிரிந்து சென்று விட்டார். மேலும், இவனுடன் ஆட்டோ ஓட்டும் மற்றொரு நண்பனும் இது போன்று பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து  வந்துள்ளதாக கூறப்படுகின்றது அவனையும் காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck party member black mail women


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->