ராகுல் காந்தி மாரத்தான் ஓடினாலும் பயனில்லை - வானதி சீனிவாசன் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல். ராகுல் காந்தியின் இந்த நடைபயணம் அவரது உடல் நலத்திற்கு நல்லதாக இருக்கலாம். ஆனால் நாட்டிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு போதும் பயனில்லை என்றுவானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் நடைபயணம் குறித்து பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,

"ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மூலம் இறந்து போன காங்கிரஸ் கட்சியை உயிரோட்ட முடியுமா என்று முயற்சி செய்து பார்க்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தேசிய சிந்தனையால் ஈர்க்கப்பட்டு மோடியின் செயல்பாடுகளால் அவர்கள் பா.ஜ.கா.விற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதனால் கட்சியை மீட்க ராகுல் காந்தி இந்த நடைப்பயணத்தில் ஈடுபட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல். ராகுல் காந்தி நடந்தாலும் சரி, மாரத்தான் ஓடினாலும் சரி அது எந்த பயனையும் தராது.

ராகுல் காந்தியின் இந்த நடைபயணம் அவரது உடல் நலத்திற்கு நல்லதாக இருக்கலாம். ஆனால் நாட்டிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு போதும் பயனில்லை". என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanathi Srinivasan criticizes rahul gandhi padayatra


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->