பாகிஸ்தானிடம் ஆதரவு கேட்ட காங்கிரஸ்.... மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி.!
Union Minister say Congress asked for Pakistans support
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு அளித்தார் பேட்டியில், "காங்கிரஸ் தலைவர்கள், பா.ஜ.க.விற்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.
நமது நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தான் பயங்கரவாதம் உருவானது. நமது நாட்டில் பயங்கரவாதம் உருவாக காங்கிரஸ் தான் முக்கிய காரணம்.
இவர்களின் ஆட்சிக் காலங்களின் போது நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்க பாகிஸ்தானிடம் ஆதரவு கேட்ட காங்கிரஸ் கட்சியினருக்கு பயங்கரவாதம் குறித்து பேசுவதற்கு தகுதி இல்லை.
காங்கிரஸ் சித்தராமையாவின் 75-வது பிறந்தநாளை 'சித்தராமோற்சவம்' என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடுவதால், பாஜக.,விற்கு எந்த பிரச்சினையும் இல்லை.
மல்லிகார்ஜுன கார்வே, பரமேஸ்வரை ஓரங்கட்டிய சித்தராமையாவின் தற்போதைய ஒரே எதிரி டி.கே.சிவக்குமார் தான். டி.கே.சிவக்குமாரை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்காக தான் சித்தராமோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களின் பாஜக.,வுக்கு தான் லாபம்" என்று தெரிவித்தார்.
English Summary
Union Minister say Congress asked for Pakistans support