விரைவில் கைது செய்யப்பட போகிறாரா எடப்பாடி பழனிசாமி.?! ஆளும் கட்சி முக்கியதலைவர் சூளுரை.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சந்தைப்பேட்டை பகுதியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அப்பகுதி நகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது, " எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நண்பர் இளங்கோவன் பணத்தை வாங்கிக்கொண்டு மக்களே வசிக்காத இடங்களில் சாலை அமைத்து கொடுத்துள்ளார்.

விரைவில் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். இளங்கோவனும், எடப்பாடி பழனிசாமியும் ஜெயிலுக்குள் போய் கம்பி எண்ணுகிற நிலை விரைவில் ஏற்பட போகிறது. 

மேலும், எடப்பாடி பழனிசாமி 2 நாட்களாக மேற்கொள்ளும் பிரசாரத்தில் சட்டமன்றத்தை முடக்க போவதாக தெரிவித்து வருகிறார். அவர் ஆட்சி அமைத்ததை போல நாங்கள் ஒன்றும் கூவத்தூர் போய், சசிகலாவுடைய காலில் விழுந்து ஆட்சியை கைப்பற்றவில்லை.

மக்களை சந்தித்து, மக்களிடத்தில் நாங்கள் வாக்குறுதி கொடுத்து  அவர்களுடைய ஆதரவை பெற்று தான் ஆட்சி அமைத்துள்ளோம். கடந்த ஒரு வாரமாக எடப்பாடி பழனிசாமி என்னை தேடிக் கொண்டிருப் பதாக கூறுகிறார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து விட்டு இப்பொழுது காணாமல் போய் விட்டதாக கூறுகிறார்.  

கடந்த ஒரு வாரமாக நான் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து செய்துகொண்டுதான் இருக்கிறேன். இங்கே பிரசாரத்தை முடித்துவிட்டு ஈரோடு மாவட்டத்திற்கு செல்கிறேன். இது அனைவருக்கும் தெரிந்ததுதான் ஆனால் எனக்கு மட்டும் தெரியவில்லையாம்." என்று நக்கலாக தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanithi warning to eps


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->