கர்நாடக அரசை கண்டித்து.. தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ராமேஸ்வரம் தபால் நிலையம் வாசலில் நின்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் தபால்நிலையம் வாசலில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இந்தப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு கர்நாடக அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஆனது மாநில இளைஞரணி தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK protest against Karnataka govt


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->