வேதனையுடன் டிடிவி தினகரன் வெளியிட்ட இரங்கல் செய்தி.!!
ttv dinakaran mourns of cuddalore 7 people death
நேற்று கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் 7 சிறுமியர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கெடிலம் ஆற்றில் குளித்தபோது 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், கடலூர் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்த 7 பேர் உயிரிழந்ததற்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், கடலூர் மாவட்டம் ஏ. குச்சிபாளையம், கீழ் அருங்குணம் பகுதியில் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவிகள் உள்ளிட்ட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த துயர சம்பவத்தை அறிந்து வேதனை அடைந்தேன்.
பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி, இத்தகைய துயர சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
English Summary
ttv dinakaran mourns of cuddalore 7 people death