வெளியான காணொளி : வேதனையில் டிடிவி தினகரன்! - Seithipunal
Seithipunal


மியன்மார் மற்றும் தாய்லாந்தில் சட்ட விரோத கும்பலிடம் சிக்கித் சித்ரவதைக்கு ஆளான தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் பேசும் காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் சிக்கிய தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்று, பல்வேறு தரப்பில் இருந்ததும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "வெளிநாட்டு வேலைக்குச் சென்று மியன்மார் மற்றும் தாய்லாந்தில் சட்ட விரோத கும்பலிடம் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

சித்ரவதைக்கு ஆளான தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் பேசும் காணொளியைப் பார்க்கும்போது மிகுந்த வேதனை ஏற்படுகிறது. அதனால்தான், வெளிநாட்டு வேலைகளில் தமிழர்கள் யாரும் ஏமாற்றப்படாமல் இருப்பதற்கு சரியான வழிமுறைகளை வகுத்திட வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை பெயரளவிற்கு மட்டுமில்லாமல், செயல்படக்கூடியதாகவும் இருப்பது அவசியமாகும்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Say About Miyanmar ThaiLand Tamil People


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->