ஜெ-க்கு துரோகம் செய்தவர் டிடிவி தினகரன்..தங்கத்தமிழ்செல்வன் தடலாடி.!! - Seithipunal
Seithipunal


இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கின்றது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இன்று பிரச்சாரத்தின் கடைசி நாள் என்பதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவரும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வன் உசிலம்பட்டி பகுதியில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேனிக்கு புதிய விமான நிலையத்தை கொண்டு வருவேன் என்று கூறி மக்கள் இடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரன் 14 ஆண்டுகள் அதிமுகவில் இருந்து விலகி வைத்த காரணத்தை ஓ பன்னீர்செல்வம் இப்போது தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் உயிரோடு இருந்தபோது அதிமுக எம்.எல்.ஏக்கள் தன் பக்கம் இருந்து முதலமைச்சராக முயற்சி செய்தார் டிடிவி தினகரன். உளவுத்துறை கொடுத்த அடிப்படையிலேயே கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் டிடிவி தினகரன். 15 ஆண்டுகள் நல்லது செய்துவிட்டு வனவாசம் செல்லவில்லை அவர். ஜெயலலிதா அம்மையாருக்கு துரோகம் செய்ததாலே 15 ஆண்டுகள் அதிமுகவில் விலகி வைக்கப்பட்டிருந்தார் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Treachery for jayalalitha ttv dinakaran


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->