திமுக, காங்கிரசை மக்கள் கைவிட்டுவிட்டனர் - துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேச்சு.!
TN Deputy CM OPS Speech Madurai Election Campaign 2 April 2021
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் 10 வருடம் வனவாச தண்டனை வாங்கிவிட்டார்கள். திமுகவை மக்கள் கைவிட்டு இருக்கின்றனர் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், " எதிர்வரும் 2021 சட்டப்பேரவை தேர்தல் மக்களின் சக்திக்கும் - தீய சக்திக்கும் இடையேயான தேர்தல் ஆகும்.
திமுக என்ற தீய சக்தி இந்த தேர்தலுடன் ஒழிக்கப்பட வேண்டும். திமுகவை மக்களே வேண்டாம் என்று புறக்கணிக்க தொடங்கிவிட்டார்கள். அதற்கான தேர்தல் களமே இதுதான். மீண்டும் தமிழகத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தான் வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள்.
அம்மாவின் ஆட்சியே மீண்டும் தமிழகத்தில் நடைபெறும். பொய்மையான வாக்குறுதிகளை வழங்கிய திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் 10 வருடம் வனவாச தண்டனை வாங்கிவிட்டார்கள். திமுகவை மக்கள் கைவிட்டு இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி எப்போதோ மக்களால் கைவிடப்பட்டுவிட்டது.
பிரதமர் மோடியின் தலைமையில் சிறந்த ஆட்சி நடைபெற்று வருவதால், இந்திய அரசு வல்லரசாக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தந்திருக்கிறார். எதிர்கால தலைமுறை வளமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க அதிமுக தலைமையிலான ஆட்சி சிறப்பாக செயல்படும் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
TN Deputy CM OPS Speech Madurai Election Campaign 2 April 2021