மேயருக்கு பணம் மட்டுமே குறி.. திமுக‌ கவுன்சிலர் திடீர் ராஜினாமா.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாநகராட்சியின் 7வது வார்டு திமுக கவுன்சிலர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.

தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் எந்தவித மக்கள் நலப் பணியாளர்களும் நடக்கவில்லை என தெரிவித்துள்ள திமுக கவுன்சிலர் இந்திராணி பணத்தை‌ மட்டுமே குறிக்கோளாக கொண்டு மேயர் செய்யப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பலமுறை மனு அளித்தும் தனது வார்டில் எந்த பணியும் நடைபெறவில்லை, மாநகராட்சி அதிகாரிகளும் சரிவர வேலை செய்யவில்லை என மாநகராட்சி அலுவலகம் வாயிலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆணையரிடம் கடிதம் வழங்கியுள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirunelveli DMK counsellors resigned


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->