பரபரப்பான அரசியல் சூழலில்.. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்.!
Tamilnadu governor RN Ravi today going to Delhi
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் இன்று டெல்லி செல்கிறார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக முதலமைச்சருக்கு ஆளுநர் கடிதம் எழுதினார்.
இதனையடுத்து திமுக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களை தெரிவித்தனர். இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டு எந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்துமாறும் ஆளுநருக்கு தெரிவித்தார். இதனையடுத்து தனது கடிதத்தை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சருக்கு ஆளுநர் மீண்டும் கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்க அனுமதி அளிக்குமாறும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படியும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு கடிதம் எழுதினார்.
இதனிடையே ஆளுநர் என்பவர் அரசியல்வாதி இல்லை. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. தனது கடமையை மட்டும் செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி என்று மாலை 5 மணிக்கு டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் அவர் ஒரு வாரம் டெல்லியில் தங்கியிருந்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Tamilnadu governor RN Ravi today going to Delhi