என்ன நடக்கிறது இலங்கையில்? போராடும் மக்களுக்கு போலீஸ் பாதுகாப்பு - அதிரடி உத்தரவை பிறப்பித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.! - Seithipunal
Seithipunal


இலங்கை வரலாற்றில் இல்லாத வகையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். 'இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் எடுத்த தவறான முடிவுகள் தான் காரணம்' என எதிர்க் கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டம் செய்தனர்.

தொடர்ந்து கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக கோரி ஒரு மாதமாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டங்களின் எதிரொலியாக பிரதமர் மகிந்த ராஜபக்சே, தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இதனை தொடர்ந்து, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுக்கொண்டார். புதிய பிரதமருக்கு மகிந்த ராஜபக்சேயின் கட்சியும் முழுமையான ஆதரவு கொடுப்பதாக அறிவித்துள்ளது. இருந்த போதிலும், அந்நாட்டு மக்களும், எதிர்க்கட்சிகளும் அதிபர் கோத்தபய ராஜபக்‌சே பதவி விலகும் வரை இந்த போராட்டம் நடக்கும் என்றும் அறிவித்தனர்.

இந்நிலையில், மக்கள் போராட்டத்திற்கு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அவரின் அந்த பேட்டியில்,

"வீட்டுக்கு செல்  கோத்தா என்ற முழக்கத்துடன் கூடிய மக்களின் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும். 'வீட்டுக்கு செல்  கோத்தா' முழக்கம் காரணமாக இலங்கை அரசியல் அமைப்பில் புதிய மாற்றம் ஏற்படும். இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கான பொறுப்பு உண்டாகும்" என்று ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். 

மேலும், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் எவையும் இடம்பெறாது என ரணில் விக்ரமசிங்கே உறுதி அளித்துள்ளார்.

குறிப்பாக, அமைதியை நிலைநாட்ட ராணுவம் மற்றும் போலீஸ் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் முன்வைத்துள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதி அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanka Economic crisis Ranil wikramasinge announce


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->