தமிழிசை இப்படிப்பட்டவரா.? அமைச்சர் வெளியிட்ட தகவல்.!
sp velumani says about tamilisai
நேற்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை, தெலுங்கானா ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டது. அதன்பின்னர், செய்தியாளரிடம் பேசிய தமிழிசை பாஜகவினருக்கும் தனது தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.
தொடர்ந்து பாஜகவின் அனைத்து பொறுப்புகளிலும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் விளக்கினார். அதன் பின்னர் பல்வேறு தரப்பினரும் தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். பல அரசியல் கட்சித் தலைவர்களும் கட்சி பாகுபாடின்றி தமிழிசைக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பலரிடமும் பாராட்டு பெற்று வந்த தமிழிசையின் ஆளுநர் பதவியை சிலர் இணையதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தனியார் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர், செய்தியாளரிடம் பேசிய பொழுது "வாழ்வின் பல வெற்றி தோல்விகளை சந்தித்த தமிழக ஆளுநர் பதவி கிடைத்ததில் ஒரு தமிழனாகமிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சகோதரிக்கு பதவி கிடைத்ததை உணர்ந்து அவரை விமர்சிப்பதை நிறுத்தி கொள்ளவேண்டும். அவர் ஒரு பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர். " என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
sp velumani says about tamilisai