வெளியான விபத்து செய்தி: பேரதிர்ச்சியில் சீமான்.! - Seithipunal
Seithipunal


திருவொற்றியூர் குடிசை மாற்றுவாரிய அடுக்ககம் திடீரென முழுவதுமாக இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானதை அறிந்து பேரதிர்ச்சி அடைந்ததாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தொடர்ச்சியாக நிகழும் அடுத்தடுத்த கட்டிட விபத்துகள் குறித்து எவ்வித அக்கறையுமின்றி, தமிழக அரசு அலட்சியமாக செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது. 

இக்கட்டிடங்கள் கட்டப்பட்டு 25 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் அடியோடு இடிந்து விழுவது அவற்றின் தரமற்ற நிலையையே காட்டுகிறது. எனவே, இனி இதுபோன்று நடக்காதவாறு அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டிடங்களையும் தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தற்போது இடிந்து விழுந்துள்ள திருவொற்றியூர் அடுக்ககத்தில், தங்கியிருந்த மக்களுக்கு உடனடியாகப் பாதுகாப்பான மாற்று வாழ்விடம் வழங்குவதோடு, தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு தலா ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்கவேண்டுமெனவும் தமிலாக் முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் சீமான் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman say about thiruvotriyur building accident


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->