திமுகவின் 8 வழிச்சாலை திட்ட நிலைப்பாடு - ஒரே வார்த்தையில் முடித்த சீமான்.!
SEEMAN SAY ABOUT DMK STAND SALEM 8 WAY ROAD
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளார்களை சந்தித்து தெரிவித்ததாவது, "8 வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கவில்லை என்று அமைச்சர் பேசுகிறார். நீதிமன்ற தீர்ப்பையே விமர்சித்து ஐயா ஸ்டாலின் கொடுத்த அறிக்கை உள்ளது.
அந்த பெயரிலேயே திட்டத்தைச் செயல்படுத்திவிட்டால் மக்கள் கோவப்படுவார்கள் என்று ‘பயண நேரம் குறைப்பு சாலை திட்டம்’ என்று பெயர் மாற்றி அதே 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்த துடிக்கிறார்கள்.
இவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்று பேசுவார்கள், ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்டால் ஒன்று பேசுவார்கள். 5000 ஏக்கரில் விளைநிலங்களை அழித்து வானூர்தி நிலையம் அமைப்பதற்கு பதிலாக, ஏற்கனவே மீனம்பாக்கத்தில் 1500 ஏக்கரில் விமான நிலையம் இருப்பது போல, அதை உள்நாட்டு விமான நிலையமாக வைத்துக்கொண்டு, இங்கும் 1500 ஏக்கரில் உள்ள தரிசு புறம்போக்கு இடத்தில் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைத்துக்கொள்வதற்கு நாங்கள் தடையாக இல்லை.
விளைநிலங்களை அழித்துவிட்டு விமான நிலையம் அமைப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். கட்டிடங்களை அழித்துவிட்டு வெறும் நிலமாக்க முடியும் ஆனால், விளைநிலங்களை அழித்துவிட்டால் மீண்டும் விளைநிலமாக்க முடியாது.
ஏற்கனவே, இந்த நாட்டில் விளைநிலங்களின் எண்ணிக்கை குறைவு. விளைநிலத்தில் வானூர்தி நிலையம் அமைக்கலாம், ஆனால் தேவைப்படும்போது வானூர்தி நிலையத்தை அழித்துவிட்டு விளைநிலமாக மாற்ற முடியாது.
இந்த விமான நிலையத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்கிறார் அமைச்சர். பரந்தூரில் விமான நிலையம் அமைத்தால் சென்னைக்குள் எப்படி போக்குவரத்து நெரிசல் குறையும்? எப்படிப்பட்ட அறிவார்ந்த ஆட்சியாளர்களை மக்கள் தேர்வு செய்துள்ளார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்” என்று சீமான் தெரிவித்தார்.
English Summary
SEEMAN SAY ABOUT DMK STAND SALEM 8 WAY ROAD