ஜெயலலிதா மறைவுக்குப் பின்.. கோடநாடு பங்களாவுக்கு சசிகலா விசிட்!! - Seithipunal
Seithipunal


மறைந்த தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

இது தொடர்பான வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

கோடநாடு வழக்கு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவருடைய தோழி சசிகலா இன்று கோடநாடு பங்களாவில் தங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்காக அவர் சென்னையில் இருந்து கோடநாடு புறப்பட்டு உள்ளதாகவும் இன்று அவர் அந்த பங்களாவில் தங்க உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikala stay in Jayalalithaa kodanadu estate guest house today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->