மருத்துவமனையில் உயிரிழந்த முக்கிய நிர்வாகி...அ.ம.மு.க மற்றும் அதிமுகவினருக்கு சோகம்..! - Seithipunal
Seithipunal


அ.ம.மு.கவில் அமைப்புச் செயலாளராக இருந்து முன்னாள் எம்.எல்.ஏ உயிரிழந்தால் அ.ம.மு.கவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்ட அ.ம.மு.க அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ். சிவராஜ் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த எஸ். சிவராஜ், ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதியில், 1984 முதல் நான்கு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏவாக பதவி வகித்துள்ளார். இறுதியாக விஜயகாந்த் 2011 ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட போது, அவரிடம் எஸ். சிவராஜ் தோல்வி அடைந்தார்.

இதனையடுத்து, அதிமுகவில் இணைந்த எஸ்.சிவராஜ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுகவில் ஏற்பட்ட பிளவால் டி.டி.வி தலைமைலான அ.ம.மு.கவில் இணைத்தார். தற்போது அமமுக அமைப்புச் செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில் உயிரிழந்து உள்ளார்.

இவரது உடல் நாளை திருக்கோவிலூரில் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

நான்கு முறை எம்.எல்.ஏவாகவும் அதிமுக மற்றும் அ.ம.மு.கவில் முக்கிய நபராக பதவி வகித்த எஸ். சிவராஜ் உயிரிழந்திருப்பது அக்கட்சினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் நாளை திருக்கோவிலூரில் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rishivandiyam ex.mla passed away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->