எச். ராஜாவுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த நபர்..!
replies for h raja on twitter
சமாதானம் என்ற பெயரில் சிறுபான்மையினரை கண்டிக்க தவறியதும், அவர்களின் தவறுகளை கண்டிக்காமல், மேல் பூச்சு வேலையை செய்தது காங்கிரஸ் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘’1947 - ல் மதத்தின் அடிப்படையில் நாடு பிளவுபடுத்த போதே சில நச்சு விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. வகுப்பு மோதல்கள் நடக்க துவங்கிய போது, சமாதானம் என்ற பெயரில் சிறுபான்மையினரை கண்டிக்க தவறியதும், அவர்களின் தவறுகளை கண்டிக்காமல், மேல் பூச்சு வேலையை செய்தது காங்கிரஸ்’’ எனத் தெரிவித்துள்ளார்.
அந்த நச்சு விதையின் பெயர் தான் அந்த நச்சு விதையின் வழித்தோன்றல் தான் மகாத்மா காந்தியின் உயிரை காவு வாங்கியது. பிரிட்டீஷ் அரசாங்கத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதியவர்கள் தான் இன்று தேசபக்தர்களாக வேடம் போட்டுகொண்டிருக்கிறார்கள்
இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் ஒருவர், ‘’அந்த நச்சு விதையின் பெயர் தான் ஆர்.எஸ்.எஸ். அந்த நச்சு விதையின் வழித்தோன்றல் தான் மகாத்மா காந்தியின் உயிரை காவு வாங்கியது. பிரிட்டீஷ் அரசாங்கத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதியவர்கள் தான் இன்று தேசபக்தர்களாக வேடம் போட்டுகொண்டு இருக்கிறார்கள்’’ என்று ட்விட்டர் தலத்தில் தெரிவித்திருந்தார்.
English Summary
replies for h raja on twitter