தேர்தலை கருத்தில் கொண்டு தான் முதல்வர் பார்வையிடுகிறாரா.?! - அமைச்சர் பேட்டியால் அதிர்ச்சி.!
RAJENTHIRA BALAJI SPEECH ABOUT STALIN DMK
விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, "நிவர் புயல் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று முதல்வர் பழனிசாமி கொட்டும் மழையிலும் மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றார்.
புயல் பாதித்த பகுதிகளுக்கு ஆவின்பால் தங்குதடையின்றி கிடைத்துள்ளது. புயலை பொருத்தவரை வருமுன் காப்போம் என்று எடப்பாடி எடுத்த நடவடிக்கையை அனைவராலும் பாராட்டப்பட்டு இருக்கின்றது. புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்வதை பார்த்து வேறு வழி இல்லாமல் ஸ்டாலின் பார்வையிட வந்தார்.
சேவை செய்யவேண்டும் எனும் எண்ணத்தில் புயல் பகுதியை பார்வையிடவில்லை தேர்தலை கருத்தில் கொண்டுதான் இதுபோல முதல்வர் பார்வையிடுவதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். யார் நடிக்கிறார்கள் என்பதை மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலின்போது மக்களின் தேர்வு தெரியும்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
RAJENTHIRA BALAJI SPEECH ABOUT STALIN DMK