ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கில் திருப்பம்.! உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!!
radhapuram case investigation order from supreme court
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றியை எதிர்த்து. திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
ராதாபுரம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தபால் வாக்குகளை மட்டும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் முன்னிலையில் ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி கடந்த மாதம் நடைபெற்றது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தகோரிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
English Summary
radhapuram case investigation order from supreme court