தேசியக்கொடியேற்றிய புதுவை முதலைமைச்சர் என். ரங்கசாமி.!
Puduvai Chief Minister N Rangasamy national flag
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நாட்டின் 75-வது சுதந்திர தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அப்போது, புதுவை முதலைமைச்சர் என். ரங்கசாமி தேசியக்கொடியேற்றி வைத்து காவலர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் சட்டப்பேரவை தலைவர், அமைச்சர்கள், உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் என். ரங்கசாமி தனது உரையில், புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ. 500 உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
Puduvai Chief Minister N Rangasamy national flag