சிறுவன் உயிரிழப்பு: 3 மணிநேரமாக சாலை மறியல் போராட்டம்.! புதுக்கோட்டையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்டபோது, தவறுதலாக தலையில் குண்டு பாய்ந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த செய்தி அறிந்த சிறுவனின் உறவினர்கள் கடந்த மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.1கோடி இழப்பீடு வழங்க கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரியும் சிறுவனின் உறவினர்கள் கடந்த மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போலீசாருக்கும், சிறுவனின் உறவினர்களுக்கும் இடையே இதனால் தள்ளுமுள்ளு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இதற்கிடையே, புதுக்கோட்டை, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, பசுமலை பட்டியில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்துள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஆட்சியர் முடிவு செய்துள்ளார் என்றும் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukottai Narthamalai People Protest


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->