ரூ.30,000 கோடி! ஆடியோ பொய்! ஆனால்.., இனிமேல் நிறைய வரும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பகீர்! - Seithipunal
Seithipunal


ரூ.30,000 கோடி ஆடியோவுக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஒரே வருடத்தில் 30,000 கோடி பணம் குவித்து வைத்திருப்பதாக, திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஊடகவியலாளர் ஒருவரிடம் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டு இருந்தார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆடியோவிற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இடமிருந்தோ, திமுக தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் மறுப்பும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், அந்த ஆடியோ பொய் என்றும், வரும் காலங்களில் ஜோடிக்கப்பட்ட அடியோக்கள் நிறைய ஆடியோக்கள் வரும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் விளக்கத்தின் சுருக்கம் : இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது. இந்த ஆடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடுத்து என்னுடைய நேரத்தை வீணடிக்கவில்லை.

வழக்கு தொடுத்தல் அது அவர்களுக்கு தேவையில்லாத விளம்பரத்தை ஏற்படுத்திக்கொடுக்கும். என் மீதான இந்த குற்றச்சாட்டுகளை புறக்கணித்துவிட்டு தனது பணியை தொடர விரும்புகிறேன் என்று, அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும், வரும் காலங்களில் இதுபோல் பல ஜோடிக்கப்பட்ட ஆடியோ கிளிப்புகள் வெளியாகும் என்றும் அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PTR Thiyakarajan wxplain about audio


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->