உள்ளாட்சி தேர்தலில் அந்த ஒரு மாவட்டத்தில்., அதிமுகவை முந்திய பாமக.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைகளுக்கும், விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில், மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில், திமுக கூட்டணி 138 இடங்களை கைப்பற்றியுள்ளது.

அதிமுக கூட்டணி இரண்டு இடங்களை கைப்பற்றியுள்ளது. மற்ற எந்த ஒரு கட்சியும், சுயேச்சை வேட்பாளர்களும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.

இதேபோல், மொத்தமுள்ள 1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில், திமுக கூட்டணி 1021 இடங்களையும், அதிமுக கூட்டணி 207 இடங்கையும் கைப்பற்றின. தனித்து போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 45 இடங்களை கைப்பற்றி, தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக உருவெடுத்து உள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஐந்து இடங்களையும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன. சுயேச்சை வேட்பாளர்கள் 85 இடங்களை கைப்பற்றி உள்ளனர்.  இதில், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. 

இதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மொத்தமுள்ள 127 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி எண்பத்தி மூன்று இடங்களை கைப்பற்றி கைப்பற்றியது. திமுக 79 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.

அதிமுக கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், அதிமுக 16 இடங்களிலும், பாஜக ஒரு இடத்தையும் கைப்பற்றியது. அதே சமயத்தில் தனித்து போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 18 இடங்களை கைப்பற்றி அதிமுக கூட்டணியை விட ஒரு இடம் முன்னிலை பெற்றது. தனித்துப் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு இடத்தையும் ,சுயேட்சை வேட்பாளர்கள் 8 இடத்தையும் கைப்பற்றியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk secound place in ranipettai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->