"எடப்பாடியின் ஆட்டமெல்லாம் அந்த ஒன்றுக்கு தான்".! செய்தியாளர்களிடம் புகழேந்தி காட்டம்.!  - Seithipunal
Seithipunal


சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி, "அதிமுக ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் உட்பட அனைவருமே விரும்புகிறார்கள். 

ஆனால், கொடநாடு வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக தான் எடப்பாடி பழனிசாமி, 100 சதவீதம் ஓபிஎஸ்-உடன் இணைய வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அவரது இந்த முடிவு குறித்து ஓபிஎஸ் மிகவும் வருத்தப்பட்டார்.

அதிமுகவை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் எடப்பாடி பழனிசாமி இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஓ.பன்னீர்செல்வம் கட்டாயம் பங்கேற்பார். தீய சக்தி எடப்பாடியுடன் அமர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் உட்காரதான் வேண்டும். 

தேவர் ஜெயந்தியன்று தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிய ஓபிஎஸ் க்கு மட்டும்தான் தகுதி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கும், தேவருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? சாதி என்ற போர்வையில் திண்டுக்கல் சீனிவாசன், ஆர் பி உதயகுமார் பேசி வருகின்றனர். 

சாதி இல்லாத கட்சியாக தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவை வழி நடத்தினார்கள். எடப்பாடி பழனிசாமி எப்போதும் பொதுச் செயலாளராக முடியாது. காலம் வரும்போது நாங்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு கட்டாயம் செல்வோம்." என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops supporter pukalenthi about eps and kodanadu issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->