சற்றுமுன் | என் வாயை கிளறாதிங்க.. முற்றியது விவகாரம்., கொந்தளிக்கும் ஓபிஎஸ்.!
OPS say about admk office incident aug end
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தனி நீதிபதி தீர்ப்பளித்த பின்னர், ஓபிஎஸ் தரப்பிலிருந்தும், எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்களை, ஒருவர் மீது ஒருவர் வைத்து வருகின்றனர்.
குறிப்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான ஆர்பி உதயகுமார், ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் ஓபிஎஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
அண்மையில் எடப்பாடி பழனிசாமி பேசிய போது கூட, அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அடியாட்களை கொண்டு வந்து, பொருட்களை திருடிய விட்டதாக ஓபிஎஸ் மீது ஈபிஎஸ் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில், இன்று தேனியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய ஓ பன்னீர்செல்வம், "ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம் அதிமுக. நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு கட்சியை பாதுகாக்க வேண்டும்.
அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்ட யார் அதிகாரம் கொடுத்தது? என் வீட்டில் எதற்கு நானே திருட போகிறேன்" என்ற ஆவேசமாக பேசினார்.
மேலும், என்னிடம் அதிகபட்ச தகவல்கள் இருக்கின்றன. நான் வாயை திறந்தால் சிக்கல் அதிகமாகும் என்ற தோணியில் ஓபிஎஸ் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
English Summary
OPS say about admk office incident aug end