#சற்றுமுன் || சேலத்தில் ஈபிஎஸ்.. சென்னையில் ஆலோசனையை தொடங்கும் ஓபிஎஸ்.!
OPS ADMK OFFICE TAMILNADU
அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதிமுகவின் இந்த ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் தனித்தனியாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், முன்னால் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் செல்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், ஓபிஎஸ் அதிமுக அலுவலகம் செல்கிறார்.
தற்போது, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி உள்ளிட்டோர் ஆலோசனை செய்து வருகின்றனர்.
மேலும், எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றுள்ள நிலையில், சென்னையில் மூத்த நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
OPS ADMK OFFICE TAMILNADU