வெளியான தொலைக்காட்சி அறிவிப்பு : அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு, மகிழ்ச்சியில் ஓபிஎஸ் தரப்பு.!
OPR NOW ADMK MP ISSUE
கடந்த மாதம் 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் உச்ச, உயர்நீதிமன்ற தடை ஏதும் இல்லாமல் நடந்தது. இந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், சிறப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, ஓ பன்னீர்செல்வத்தை நீக்கி பொதுக்குழு தீர்மானித்தது. பின்னர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் முக்கிய பொறுப்புகளில் நிர்வாகிகளை நியமித்தார். மேலும், ஓ பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த அனைவரையும் கட்சியிலிருந்து நீக்குவதாக உத்தரவு பிறப்பித்தார்.
இதில், ஓ பன்னீர்செல்வத்தின் மகனும், அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத்-யை நீக்கி உத்தரவிட்டார். மேலும், அவரை அதிமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகுதி நீக்கம் செய்யக்கோரி மக்களவை சபாநாயகருக்கு பரிந்துரை கடிதம் ஒன்றையும் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில், இன்றைய பாராளுமன்ற மக்களவை கூட்டத் தொடரின்போது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ரவீந்திரநாத் எம்.பி.,யை, அதிமுக எம்.பி., என்று குறிப்பிட்டு 'சன்சத்' தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான சன்சத் தொலைக்காட்சியில், ரவீந்திரநாத் அதிமுக எம்.பி., என்று குறிப்பிடப்பட்டிருப்பது ஓபிஎஸ் ஆதரவாக மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இது எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.