விரைவில் ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பு - ஓபிஎஸ் மகன் அளித்த பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


ஆளும் திமுக மற்றும் சசிகலா-டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஓ பன்னீர்செல்வம் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அதிமுகவின் பொதுக்குழுவை சேர்ந்த 95 சதவீத உறுப்பினர்கள் ஒன்றுக்கூடி, அதிமுகவின் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தனர்.

மேலும், ஓ பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியத்துடன் அவரின் ஆதரவாளர்கள், அவரின் மகன் ரவீந்திரநாத் ஆகியோரையும் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஆதரவாளர்கள் டிடிவி தினகரனை வரவேற்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது 

இந்நிலையில், ராஜபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேனி மக்களவைத் தொகுதி எம்பி ரவீந்திரநாத் இடம், டிடிவி தினகரன்-ஓ பன்னீர்செல்வம் சந்திப்பு நடைபெறுமா? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த ரவீந்திரநாத், "தொண்டர்களின்  மனதை பொறுத்து சந்திப்பு அமையும். கட்சியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை தாண்டி, தற்போது வரை அதிமுகவின் மக்களவையில் பணியாற்றி வருகிறேன். அதிமுகவின் பொதுக்குழு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை" என்று ரவீந்திரநாத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ope say about ops ttv dhinakaran meet


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->