கருணாநிதி பிறந்த நாளன்று பெரிய மாற்றம்.? ஸ்டாலின் அறிவிப்பு..!!
on karunanidhi birthday some changes in tamilnadu politics
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார் அவரை ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் விளாச்சேரி, திருநகர் ,அவனியாபுரம் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது தான் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல நடைபெற்றது அப்போது அவர் உயிரோடு இருந்தாரா ? சுயநினைவோடு இருந்தாரா ? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது ஜெயலலிதாவின் மரணமும் மர்மமாகவே உள்ளது
அதிமுக ஆட்சி 2 ஆண்டுகளாக மைனாரிட்டி ஆட்சியாக தான் நடத்திக்கொண்டியிருக்கிறார்கள் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் 22 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தளுக்கான முடிவுகள் வருகிற 23-ஆம் தேதி வெளியாகிறது தேர்தல் முடிவு வருகின்ற அந்த நாளில் மோடி வீட்டுக்கு போவது போல எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு போய்விடுவார்
"கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி மத்தியிலும் மாநிலத்திலும் புதிய ஆட்சி மலரும் அப்போது ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை சிறையில் போடுவது தான் திமுகவின் முதல் வேலை" , இதை நான் சொல்லும் போதெல்லாம் அதிமுக தொண்டர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்,மேலும் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தான் இதற்கு எல்லாம் முற்று புள்ளி வைக்க முடியுமென அதிமுக தொண்டர்களே என்னிடம் கூறுகிறார்கள்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
English Summary
on karunanidhi birthday some changes in tamilnadu politics