தமிழகத்தில் நோட்டாவுக்கு பதிவான வாக்குகள்..! ஆடிப்போன அரசியல் கட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டது. முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் நடந்து முடிந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக 09 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. திமுக 13 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 

திமுக கூட்டணிக்கு மொத்தம் பதிவான வாக்குகள், 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 481 (51.5%). அதிமுக கூட்டணிக்கு மொத்தம் பதிவான வாக்குகள், 1 கோடியே 26 லட்சத்து 6 ஆயிரத்து 636 (29.8%). அமமுக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் அரசியல் கட்சிகளுக்கு பதிவான வாக்குகள், 2 லட்சத்து 50 ஆயிரத்து மேல் வாக்குகளை பெற்றுள்ளது.

நோட்டா சின்னத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள், 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 (1.3%) வாக்குகள் பெற்றுள்ளது. இதில் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் 23 ஆயிரத்து 343 வாக்குகள் பெற்றுள்ளது. மேலும் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் நோட்டா சின்னத்தில் பதிவான வாக்குகள் 47 ஆயிரத்து 191 வாக்குகள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

noto poll result


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->