#BREAKING || கடலூர் - விசிகவின் முதுகில் குத்திய திமுக.! அறிவிக்கப்பட்ட விசிக வேட்பாளர் படுதோல்வி.!
NELLIKUPPAM VCK CANDIDATE LOSS
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் தேர்தலில் அறிவிக்கப்பட்ட விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து, திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் மொத்தம் உள்ள 30 கவுன்சிலர்களின் 23 வாக்குகள் பெற்ற திமுக வேட்பாளர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக கூட்டணியில் அறிவிக்கப்பட்ட விசிக வேட்பாளர் கிரிஜா திருமாறன் வெறும் மூன்று வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தார்.
இதேபோல், கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு அறிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார். போட்டி வேட்பாளரான திமுகவின் விஸ்வப்ரகஷ் வெற்றிபெற்ற நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் தோல்வி அடைந்துள்ளார்.
இதற்கிடையே, நாகர்கோயில் மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் மகேஸ் வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மீனாதேவ் தோல்வி அடைந்துள்ளார்.
English Summary
NELLIKUPPAM VCK CANDIDATE LOSS