தமிழிசை கூறியது வடிகட்டிய பொய்.. முதலமைச்சர் பரபரப்பு பேட்டி.!!
narayanasamy press meet about tamilisai
நேற்று தூத்துக்குடியில் செய்தியாளருக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற போவதை எண்ணி மு.க. ஸ்டாலின், கே.எஸ். அழகிரி ஆகியோர் பதட்டத்தில் உள்ளனர்.
ஸ்டாலின் தங்கியிருந்த விடுதியில் சோதனை நடத்தியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு தேர்தல் நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது வழக்கமான ஒன்றுதான் என்று கூறினார்.
பாஜகவுடன் திமுக பேசுகிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உண்மைதான் மு.க.ஸ்டாலின் ராகுலை முதலில் பிரதமர் என்றார், நேற்று சந்திரசேகர்ராவிடம் பேசினார், மறுபுறம் பதவி பசி காரணமாக பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார் என்று கூறினார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார். பாஜகவுடன், திமுக பேச்சுவார்த்தை என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியது வடிகட்டிய பொய் என்று கூறியுள்ளார்.
English Summary
narayanasamy press meet about tamilisai