இப்போது ரத்தம் கொதிக்கவில்லையா ஸ்டாலின் அவர்களே? - தேடி எடுத்து பதிலடி கொடுக்கும் பாஜக! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பிரியா என்ற 17 வயது கால்பந்து வீராங்கனை, மருத்துவர்களின் கவன குறைவால் (தவறான) பலியாகினார்.

இந்த சம்பவம் குறித்து பாஜகவின் நாராயணன் திருப்பதி தனது டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ரத்தம் கொதிக்கிறது. இந்த ஊழல் அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன? என்று டிசம்பர் 26,2018 அன்று சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு தவறுதலாக ஹெச்ஐவி ரத்தம் செலுத்திய விவாகரத்தில் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் விமர்சித்திருந்தார்.


 
நேற்று, இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பிரியா என்ற 17 வயது சிறுமிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட காரணத்தால் அந்த சிறுமியின் உயிர் பிரிந்து விட்டது. 

இப்போது ரத்தம் கொதிக்கவில்லையா திரு.ஸ்டாலின் அவர்களே? இது ஊழல் அரசு என்பதையும்,உங்கள் ஊழல் அரசின் கீழ் அரசு மருத்துவமனை எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதை விட உதாரணம் வேண்டியதில்லை என்பதையும் ஒப்பு கொள்கிறீர்களா முதல்வர் அவர்களே?

சொன்னது நீ தானா சொல் சொல் சொல்....." என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 

இவரின் இந்த பதிவும், முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது போட்ட டிவிட்டும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narayanan Thirupathy Condemn to CM Stalin For priya Death


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->