தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட எம்.பி கனிமொழி விருப்பமனு.! - Seithipunal
Seithipunal


நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் காட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தைப் பொறுத்த வரையில், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், அதற்கான விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து, கடந்த 1-ந் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் சமர்பித்து வருகிறார்கள்.

அதன் படி, நேற்றைய தினம் மத்திய சென்னை தொகுதியில் தயாநிதிமாறன் எம்.பி. மீண்டும் போட்டியிட வேண்டும் என்று மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமையில் ஏராளமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். மேலும், வடசென்னை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் தன் விருப்ப மனுவை சமர்பித்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று விருப்பமனு அளிக்க உள்ளார். இதற்கு முன்னதாகவே தி.மு.க. எம்.பி. கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் உள்ளிட்டோர் விருப்ப மனுக்களை சமர்பித்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp kanimozhi contest to thoothukudi consituency


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->