இலங்கையை எச்சரிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் - கமல்ஹாசன்!
MNM Condemn to Sri lankan navy
இலங்கை கடற் படையினரால் மயிலாடுதுறை மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அக்கட்சியின் செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன் உள்ளிட்ட 4 பேர் கோடியக்கரையில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படுவதும், இலங்கை கடற் படையின் தொடர் அத்துமீறலை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை ராணுவத்தினரால் அத்துமீறி கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், இலங்கையை எச்சரிக்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கேட்டுக் கொள்கிறது.
English Summary
MNM Condemn to Sri lankan navy