திமுகவை கற்பனையில் கூட அழிக்க முடியாது!! நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் மு.க ஸ்டாலின்!! - Seithipunal
Seithipunal


திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி, வழக்கறிஞர்கள் அணி, மருத்துவர் அணி சார்பில் முன்னெடுக்கப்படும "நீட் விலக்கு நம் இலக்கு'' எனும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் இன்று கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.  இதனை தொடர்ந்து திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு 2.0 சார்பில் நடைபெற்ற விழா மேடையில் பேசிய அவர் "நான் பக்குவப்பட்ட காலத்தில் இருந்தவன் என கலைஞர் கூறியுள்ளார். 

அவருடைய மறைவுக்குப் பின் கட்சித் தலைவராகவும் முதல்வராகவும் இன்னும் பொறுமையாக நடக்க பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறேன். பாராட்டுகளைப் போலவே விமர்சனங்களையும் நான் விரும்புகிறேன். விமர்சனங்களில் தனிப்பட்ட நலனை விட பொதுநலம்தான் அதிகமாக இருக்கும். இளம் வயதில் நாடகம் நடித்தேன், முரசொலியில் வேலை செய்தேன், கட்சி செய்திகளை எழுதியதும் உண்டு. திமுகவை எவராலும் கற்பனையில் கூட அழிக்க முடியாது" என முதலமைச்ச மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin said DMK cannot be destroyed even in dream


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->