#BREAKING : அமைச்சர் மெய்யநாதன் கடலூரில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு மாற்றம்.! - Seithipunal
Seithipunal


 உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் மெய்யநாதன் கடலூரில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன். இவர் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் நேற்று வந்துள்ளார். அப்போது ரயிலில் வந்து கொண்டிருந்தபோது திடீரென இவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நள்ளிரவு 2 மணி அளவில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். அங்கிருந்து கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்த அமைச்சர் மெய்யநாதன் மேல் சிகிச்சைக்காக கடலூரில் இருந்து சென்னைக்கு அழைத்து செல்லப்படுகிறார். தனி கார் மூலம் மருத்துவ குழுவினர் உதவியுடன் சென்னை அழைத்து செல்லப்படுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister meiyanathan travelled to Chennai hospital


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->