மக்கள் மட்டும்தான் எங்களின் நம்பிக்கை., அதிமுக கூட்டணிக்கு மக்கள் அலை அமோகமாக வீசுகிறது.! அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி.!!   - Seithipunal
Seithipunal


இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ஆம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில் 97 மக்களவைத் தொகுதிகளுக்கு உண்டான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. 

இதனையடுத்து இன்று மாலையுடன் தேர்தலுக்கான அரசியல் பிரச்சாரம் நிறைவு பெறவிருக்கும் நிலையில்., அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளின் அவர்களின் கொள்கை மற்றும் மக்களின் நலன் குறித்த தகவலுடன் இறுதிக்கட்ட பரப்புரை பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் வடசென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தேமுதிகவின் முக்கிய பிரமுகர்கள் ஆதரித்து பிரசாரம் செய்திருந்த நிலையில்., தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம் மேற்கொண்டார். 

அந்த சமயத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியர்கள் சந்திப்பில் தெரிவித்தாவது., தமிழகம் முழுவதிலும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதிமுக கூட்டணிக்கு மக்களின் ஆதரவு அலையானது அதிகளவில் உள்ளது. இந்த அலையில் சிக்காமல் உள்ள திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் காணாமல் போய்விடும்.

இதுமட்டுமல்லாது தமிழக மக்களை நம்பித்தான் அதிமுக உள்ளதே தவிர., பணத்தை ஒருபோதும் அதிமுக நம்பியதில்லை. மக்களை நம்பாத., மக்களின் மீது நம்பிக்கை இல்லாத நபர்கள் தான் பணத்தை வாரி இறைத்து வருகின்றனர்., இந்த செயலை திமுகவும் - தினகரன் கட்சியினரும் மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister jeyakumar speech about tamilnadu peoples good things


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->