எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி, இபிஎஸ் தலைமையில் மலரும்.. ராஜ்நாத் சிங்கிக்கு அதிமுக பதிலடி..!! - Seithipunal
Seithipunal


தாம்பரத்தில் நேற்று நடைபெற்ற பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் "தமிழகத்தில் ஒரே ஒருமுறை பாஜகவை ஆட்சியில் அமர்த்துங்கள். ஊழலற்ற ஆட்சியை தருகிறோம். பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால் ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள்" என பேசி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று சென்னையில் நடைபெற்ற திமுக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது திமுக ஊழல் கட்சி. அந்த ஊழல் கட்சி மீது மத்திய அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார். அது ஒரு நல்ல விஷயம். 

சீக்கிரமாக அந்த நடவடிக்கையை எடுங்கள். எல்லோரையும் சிறையில் அடையுங்கள். அதைத்தான் இன்று தமிழகமே எதிர்பார்க்கிறது. அப்போது தான் தீபாவளி கொண்டாடியதுப் போல மக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. பாஜக கட்சியை வளர்ப்பதற்காக அவர்கள் ஆயிரம் கருத்துகளைக் கூறுவார்கள். அதுகுறித்து நாம் கருத்து சொல்ல முடியாது.

சட்டப்பேரவைத் தேர்தலாக இருந்தாலும் மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. அதிமுகதான் கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்கும். வேறு யாரும் எங்களுக்கு ஒதுக்க முடியாது. நாங்கள்தான் இடங்களை ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தில் இருக்கிறோம். அதே நேரத்தில் நீங்கள் ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும். மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மலரும். இதுதான் நடக்கும்" என பதிலடி தந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MGR Jayalalitha regime will be continue under EPS


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->