ஆர்.எஸ் பாரதி மீது நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை.!! - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.!! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுவித்தன. இதனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்ததோடு அதன் மீது பதில் அளிக்குமாறு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை, திமுக அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார் 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் இத்தகைய செயல் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

குறிப்பாக நீதிமன்றத்திற்கு தாமாக முன்வந்து விசாரணை செய்ய அதிகாரம் உள்ளது. ஆனால் பழி வாங்கும் நோக்கத்தோடு அது இருக்கக் கூடாது. நீதிபதியின் செயல் அவ்வாறு அமைந்துள்ளது என விமர்சனம் செய்திருந்தார்.

மேலும் கீழமை நீதிமன்றங்களில் தீர்ப்பு பார்த்ததிலிருந்து 3 நாட்களாக தூக்கம் வரவில்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறிய கருத்துக்கு "எனக்கும் கூட தான் இந்த விவகாரத்தால் 7 நாட்களாக தூக்கம் வரவில்லை திடீர்னு கலைஞரின் பராசக்தி படத்திலிருந்து நெஞ்சு பொறுப்பதில்லையே பாடலை கேட்டேன் தூக்கம் வந்துவிட்டது. இதெல்லாம் ஒரு காரணமா? தூக்கம் வரவில்லை என்றால் என்ன நோயோ? நான் தான் போய் டாக்டரை பாக்கணும்" என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை மறைமுகமாக சாடி இருந்தார்.

இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி நீதிமன்றத்தையும் நீதிபதியும் அவமதித்துவிட்டதாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையிட்டார்.

இந்த முறையீடு மீது கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் "திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை.

நீதிபதியாக பதவி ஏற்றதற்கான சட்டப்படியான கடமையை நான் செய்தேன். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் சொல்லும் கருத்துக்களால் நான் கவலைப்படவில்லை; கருத்திலும் கொள்ளவில்லை. நான் நிலை தவறினால் நீதிபதியாக இருக்கும் திறமையை இழந்தவனாகி விடுவேன்" என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC opined does not want to file contempt of court case against RSBharathi


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->