ஜெயலலிதா ஊழல்வாதி.. அண்ணாமலை எப்போதும் உண்மையை தான் பேசுவார் - நடிகை குஷ்பு.! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா ஊழல்வாதி என்ற பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு, அவர் உண்மையை தான் பேசுவார் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் ராணுவ வீரரின் மனைவி அவமானப்படுத்தப்பட்டதாக புகாரில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தோம் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக டிஜிபி உறுதி அளித்துள்ளார். பெண்களுக்கு பிரச்சனை என்றால் தேசிய மகளிர் ஆணையம் உடன் நிற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை டிஜிபி அலுவலகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு மனு அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஜெயலலிதா ஊழல் ஊழல்வாதி என்ற அண்ணாமலையின் பேச்சு குறித்த கேள்விக்கு, அண்ணாமலை உண்மையை தான் பேசுவார் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் எந்த நேரத்தில் எப்படி பேச வேண்டும் என அவருக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் ஜெயிலுக்கு போனார். எவ்வளவு குற்றச்சாட்டு இருந்தது என எல்லோருக்கும் தெரியும். இபிஎஸ் உடனான நட்பு அப்படியே உள்ளது. கூட்டணி இருந்தாலும் அங்கும் இங்கும் சில வார்த்தைகள் வரத்தான் செய்யும். மல்யுத்த வீரர்களின் பாலியல் விவகாரத்தில் மகளிர் ஆணையம் நேரடியாக தலையிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kushbhu support to BJP Annamalai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->