அண்ணாமலை செல்வது நடைப்பயணம் அல்ல சொகுசு பயணம் - கே.எஸ்.அழகிரி.!
Ks alagiri speech about annamalai rally
அண்ணாமலை மேற்கொள்ளும் நடை பயணத்தால் அவர்களது கட்சியிலேயே எந்த மாற்றமும் ஏற்படாது என கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய நடை பயணம் தற்போது தொடர்ந்து 10-வது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பாஜக மாநில தலைவர் செல்வது பாதயாத்திரை என்று சொல்லக்கூடாது. அவர் சொகுசு காரில் தான் பயணம் செய்கிறார்.
ஒரு ஊர் வந்தவுடன் இறங்கி அங்கு நடக்கிறார். வீட்டில் நடந்தால் அதை கூட பாதயாத்திரை என்று கூறுவீர்களா? இதற்குப் பெயர் எல்லாம் நடைபயணம் இல்லை.
அண்ணாமலை மேற்கொள்ளும் இந்த நடை பயணத்தால் அவர்களது கட்சியிலேயே எந்த மாற்றமும் ஏற்படாது. அது தமிழகத்திலும் எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Ks alagiri speech about annamalai rally