நாள் குறித்த எஸ்பி வேலுமணி - கோவை வரும் எடப்பாடி பழனிசாமி!  - Seithipunal
Seithipunal


மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை கண்டித்து வரும் டிசம்பர் 2ல் போராட்டம் நடத்தப்படும் என்றும், அதிமுக போராட்டத்தை பார்த்து ஆளும் திமுக அரசு விழித்து கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் கோவை மாவட்ட அலுவலகத்தில் இன்று மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கோவை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். 

மேலும் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், கே.ஆர்.ஜெயராம், அமுல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ், அவைத் தலைவர் சிங்கை முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

பல்வேறு கட்டத்தில் நடந்த ஆலோசனையில் வரும் டிசம்பர் இரண்டாம் தேதி, கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் சாலைகளை சீரமைக்க தவறியதை கண்டித்தும், மின் கட்டணம், சொத்து வரி, கழிவு நீர் இணைப்பு கட்டணம் உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

சிவானந்தா காலணியில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி தலைமை நடக்கும் இந்த போராட்டத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, சிறப்புரையாற்ற உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai ADMK SPVelumani protest announce


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->