மு.க.ஸ்டாலின் 10 மேடைகளில் பேசுவதை விட, இவர் 10 நிமிடம் பேசினால் போதும்.. தமிழகத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவது இவர்தான்.!
karate thiagarajan says about rajini party
தான் அரசியலுக்கு வருவது உறுதி என பல ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் கூறி வருகிறார். அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பு கட்சியை தொடங்குவர் என எதிர்பாக்கப்படுகிறது.
இதனிடையே மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை மூன்றாவது முறையாக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னை கோடம்பாக்கம் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும், கட்சி தொடங்குவது தொடர்பாகவும், பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை விரிவுபடுத்துவது குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கராத்தே தியாகராஜன் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். ரஜினிகாந்த் அடுத்த சில மாதங்களில் தொடங்கி விடுவார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் 10 மேடைகளில் பேசுவதை விட ரஜினிகாந்த் பத்து நிமிடங்களில் பேசும் கருத்து மக்களிடையே பிரபலமாகி வருகிறது.
ரஜினியின் ஒவ்வொரு கருத்து மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. தமிழகத்தில் இருக்கும் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார். 2020ஆம் ஆண்டு தமிழகத்தின் ரஜினி கட்சி ஆட்சியைப் பிடிக்கப் போவது நிச்சயம் எனக் கூறினார்.
English Summary
karate thiagarajan says about rajini party